இன்றும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம்- செம்மணியில் தோண்டத் தோண்ட அதிர்ச்சி
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றும் 6 மனித எலும்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதையடுத்து, இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 31ஆம் நாள் அகழ்வுப் பணி இன்று மேற்கொள்ளப்பட்ட போதே, இவை இனங்காணப்பட்டு, இலக்கமிடப்பட்டுள்ளன.
அதேவேளை, ஏற்கனவே இனங்காணப்பட்ட 4 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள், இன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.
இதையடுத்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது.
நாளை தொடர்ந்து அகழ்வுப் பணி இடம்பெறும் என, சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.