அடுத்த ஆண்டு மே 24 ஆம் திகதிக்குப் பின் தற்போதைய அரசு ஆட்சியில் இருக்காது
தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு மே 24 ஆம் திகதிக்குப் பின்னர் ஆட்சியில் இருக்காது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர்,
அரசாங்கத்தின் மீதான அதிருப்தி பொதுமக்களிடையே மட்டுமல்ல, அரசாங்க அதிகாரிகள் மற்றும் அறிவுஜீவிகள் மத்தியிலும் அதிகரித்து வருகிறது.
தொலைநோக்கு அல்லது அனுபவம் இல்லாத ஒரு குழுவிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் என்ன நடக்கும் என்று நாங்கள் எச்சரித்தோம்.
இப்போது அதன் விளைவுகளை நாங்கள் காண்கிறோம். இது வரலாற்றில் மிகக்குறைந்த முற்போக்கான அரசாங்கம்.
மக்களின் பிரச்சினைகளுக்கு அவர்களிடம் தீர்வுகள் இல்லை, அவர்களுக்கு வாக்களித்தவர்கள் இப்போது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.
அடுத்த ஆண்டு மே 24 ஆம் திகதிக்கு முன்னர், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்களே அதனை வீட்டிற்கு அனுப்புவார்கள்.
அடுத்த ஆண்டு இந்த நாளுக்குள் – மே24ஆம் திகதிக்குள் அரசாங்கம் வீட்டிற்கு அனுப்பப்படும், எங்களால் அல்ல, அதற்கு வாக்களித்த மக்களால்,” என்றும் நளின் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.