விசுவமடு கூட்டு பாலியல் வல்லுறவு – 3 சிறிலங்கா படையினரும் விடுதலை
விசுவமடு கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று சிறிலங்கா இராணுவத்தினரை, சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து அவர்களை விடுதலை செய்துள்ளது.