மேலும்

சுதந்திரக் கட்சியை அழிக்க எடுத்த முடிவு – குமார வெல்கம

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள முடிவு, சுதந்திரக் கட்சியை அழித்து விடும் என்று எச்சரித்துள்ளார் அந்தக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் அதனைக் கைவிட்டாலும், நான் பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ளமாட்டேன்.

ஐக்கிய தேசியக் கட்சியுடனோ, பொதுஜன பெரமுனவுடனோ இணைந்து கொள்ளமாட்டேன். சுதந்திரமாக இருக்கவே எதிர்பார்க்கிறேன். தனியாக இந்த நிலைப்பாட்டை எடுக்கும் போது தனியாகவே பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

நான் எனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குவதற்கு இரண்டு தலைப் பாம்பு அல்ல.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த முடிவு சரியானது அல்ல. இது சுதந்திரக் கட்சியின் இருப்புக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கும்.

பொதுஜன பெரமுனவுடன் விருப்பத்துடன் இணைந்து கொள்ள சிறிலங்கா அதிபர் முடிவெடுக்கவில்லை.

இது சிறிலங்கா சுதந்திரக் கட்சியை கலைப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவு.

தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றால், சுதந்திரக் கட்சியினர் அந்தக் கட்சியில் இணைவார்கள்.அதற்குப் பின்னர் சுதந்திரக் கட்சி இருக்காது” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *