மேலும்

காலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பரப்புரைப் பேரணி நேற்று கொழும்பு காலிமுகத் திடலில் இடம்பெற்றது.

நேற்று மாலை 3 மணியளவில் தொடங்கிய இந்தப் பேரணியில் இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

இந்தப் பேரணியில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள், பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும், சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் உரையாற்றினர்.

இதுவரை நடத்தப்பட்ட தேர்தல் பேரணிகளில் மிகப் பிரமாண்டமானதாக இந்தப் பேரணி அமைந்திருந்தது. இதில் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *