மேலும்

எல்பிட்டிய தேர்தல் – இரவு 10 மணிக்குள் முடிவு

காலி மாவட்டத்தில் உள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

மாலை 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான 28 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இந்த தேர்தல் இடம்பெறுகிறது.

இந்த தேர்தலில் 5 அரசியல் கட்சிகளின் சார்பில் 155 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் வாக்களிக்க 53,384 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

மாலை 4 மணிக்கு வாக்களிப்பு முடிந்தவுடன், 4.30 மணியளவில் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும்.

வாக்குகளை எண்ணும் பணி மாலை7 மணிக்கு முடிவடைந்து விடும் என்றும் அதிகாரபூர்வமான முடிவு இரவு 10 மணிக்கும் வெளியாகும் என்றும் காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *