மேலும்

வாக்களிப்பு மையங்களுக்குள் படம் எடுக்கக் கூடாது –படையினருக்கு எச்சரிக்கை

அதிபர் தேர்தலின் போது, வாக்களிப்பு மையங்களுக்குள் ஒளிப்படங்கள் அல்லது காணொளிப் படங்களை பிடிக்கக் கூடாது என்று, காவல்துறை மற்றும் முப்படையினரையும், தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

அத்துடன் எந்தவொரு அதிபர் வேட்பாளருக்கு ஆதரவாகவும், பகிரங்கமாக கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறும், இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மூத்த தேர்தல் ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேர்தல் நாளில் அரசாங்க சொத்துக்களை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணைக்குழு  எச்சரித்துள்ளது.

அதேவேளை வாக்களிப்பு மையத்தில் இருந்து 500 மீற்றர் சுற்றளவுக்கு உட்பட்ட பகுதியில் கூட்டமாக கூடுவது குற்றமாக கருதப்படும் என்று காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *