மேலும்

தேர்தலுக்கு முன்னர் எம்சிசி உடன்பாடு கைச்சாத்து

வரும் 16ஆம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, மிலேனியம் சவால் நிறுவனத்தின் 480 மில்லியன் டொலர் கொடையைப் பெறுவதற்காக அமெரிக்காவுடன் உடன்பாட்டில் கையெழுத்திடப்படும் என்று, சிறிலங்கா பிரதமர்  ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

”எம்சிசி கொடை உடன்பாட்டுக்கு, இப்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, அதிபர் தேர்தலுக்கு முன்னர் உடன்பாடு செய்து கொள்ளப்படும்.

சிறிலங்கா ஏன் இந்தக் கொடை உடன்பாட்டை நிராகரிக்க வேண்டும்?” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *