அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல்அ மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சன்ன டி சில்வா தெரிவித்தார்.
அரசாங்க பணியாளர்கள் இன்றும் நாளையும் அஞ்சல் மூலம் வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வரும் நொவம்பர் 4ஆம், 5ஆமு் நாள்களில், ஆயுதப்படையினர் மற்றும் காவல்துறையினர், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச பணியாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்கவுள்ளனர்.
இந்த நாட்களில் வாக்களிக்கத் தவறியவர்களுக்காக, வரும் 7ஆம் நாள் வாக்களிப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
இந்தமுறை அதிபர் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்க 77,871 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் பல்வேறு காரணங்களுக்காக 58,841 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து, 659,030 வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அரசாங்க பணியகங்கள், பிரதேச, மாவட்ட செயலகங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பவ்ரல் அமைப்பு 1000 பேரையும், தேர்தல் வண்முறைகளை கண்காணிப்பும் நிலையம் 400 தொண்டர்களையும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளன.