மேலும்

மாதம்: September 2019

சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது ஐதேக

சிறிலங்கா ரூபவாஹினி் கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.

பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்ய நால்வர் குழு

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமான வேட்பாளர் யார்,  கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தக் கூடியவர் யார் என்ற சமூக ஆய்வுகள் மற்றும் கருத்துக்கணிப்புகளை ஆய்வு செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நால்வர் குழுவை அமைத்துள்ளது.

ஒக்ரோபர் 15இற்கு முன் தேர்தலுக்கான அறிவிப்பு

அதிபர் தேர்தலுக்கான அழைப்பை விடுப்பது குறித்து அரசியல் கட்சிகளால் தீர்மானிக்க முடியாது என்றும் அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவே முடிவு செய்யும் என்றும்,  ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமருடன் கனிமொழி சந்திப்பு

கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

சுயாதீனமான புலனாய்வுப் பிரிவுகள் அவசியம் -சம்பிக்க

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, புலனாய்வுப் பிரிவுகள் அரசியல் தலையீடுகளில் இருந்து விடுபட்டு சுயாதீனமாக இயங்க வேண்டும் என்று, சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் கடற்படை தளபதியிடம் விசாரணை – புலனாய்வு அதிகாரி கைதாகிறார்

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும், குற்ற விசாரணைப் பிரிவினர், சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜயந்த பெரேராவிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

உடன்படாவிடின் கடும் விளைவுகள் ஏற்படும் – சுதந்திரக் கட்சிக்கு மொட்டு எச்சரிக்கை

அதிபர் தேர்தல் தொடர்பாக தங்களுடன் ஒரு புரிந்துணர்வை எட்டாவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சிறிலங்கா சுமதந்திரக் கட்சிக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன எச்சரிக்கை விடுத்துள்ளது.

தோல்வியில் முடிந்த கோத்தாவின் முயற்சி

சிறப்பு மேல் நீதிமன்ற விசாரணைகளில் இருந்து தப்பிக்க, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

வெளியார் தலையீட்டை ஏற்கமுடியாது – ஜெனிவாவில் சிறிலங்கா திட்டவட்டம்

உள்நாட்டு முடிவுகள் தொடர்பாக வெளிச் சக்திகளின் தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நிலைமைகள் – ஜெனிவா இணை அனுசரணை நாடுகள் கவலை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்  அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்றும் வேகம்  மெதுவாகவே உள்ளது என்றும்,  இதற்கு, அதிகாரத்துவ தடைகள் காரணமாக இருப்பதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான இணைஅனுசரணை நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.