மேலும்

கோத்தாவின் ஊடகப் பேச்சாளர்களாக டலஸ், ரம்புக்வெல

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு இரண்டு ஊடகப் பேச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, கெஹலிய ரம்புக்வெல ஆகியோரே, கோத்தாபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என, பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியின் தலைவர்களே இரண்டு ஊடகப் பேச்சாளர்களின் நியமனத்தை உறுதி செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *