சிறிலங்கா அதிபர் தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பின் பெண் வேட்பாளர்
வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா சோசலிசக் கட்சி பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. பிரபல சூழலியலாளரான கலாநிதி அஜந்தா பெரேரா என்பவரே, சோசலிச சட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
20 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல் முறையாக சிறிலங்கா அதிபர் தேர்தலில் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளார்.
கடைசியாக, 1999ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருந்தார்.
‘குப்பை ராணி’
ஜேர்மனியில் பயிற்சி பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானியான கலாநிதி அஜந்தா பெரேராவை, சிறிலங்காவில் முறையான கழிவு முகாமைத்துவத்துக்காக போராடி வருகிறார்.
குப்பை சேகரிப்பாளர்களுடனான அவரது பணிக்காக, அவர் “குப்பை ராணி” என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.