மேலும்

சிறிலங்காவின் மூலோபாய இருப்பிடம் மிகையான முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது

சிறிலங்காவின் மூலோபாய இருப்பிடம் மிகையான முக்கியத்துவத்தை வழங்கியுள்ளதாகவும் , அதை வற்புறுத்தலுக்கான இலக்காக மாற்ற முடியும் என்றும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் (Paul Kapur) தெரிவித்துள்ளார்.

தெற்காசியா தொடர்பான, துணைக் குழுவின் விசாரணையில் அவர் சாட்சியமளித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்தியத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில், பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டானின் மூலோபாய இடங்களும்,  இதற்கு ஒத்த முக்கியத்துவத்தை வழங்குகின்றன.

அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு, அவர்களின் எல்லைகளையும் நீர்வழிகளையும் ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராகப் பாதுகாக்க உதவுகிறது.

கவனமாக இலக்கு வைக்கப்பட்ட முதலீடு, இந்த அரசுகளுக்கு, துறைமுகங்கள், தொலைத்தொடர்பு வலையமைப்பு மற்றும் எரிசக்தி தளங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கு உயர்தர, வெளிப்படையான, வற்புறுத்தலற்ற ஆதரவை வழங்க முடியும்,

கடன் பொறி இராஜதந்திரத்தின் ஆபத்துகளைத் தவிர்க்க அவர்களுக்கு  இது உதவுகிறது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், சிறிலங்கா, மாலைதீவுகள், நேபாளம் மற்றும் பூட்டானை உள்ளடக்கிய தெற்காசியா அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானது.

இந்தியா மட்டும் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ளதுடன், ஒரு துணைக் கண்ட நிலப்பரப்பை வைத்திருக்கிறது.

தெற்காசியாவை ஆதிக்கம் செலுத்த விரும்பும் ஒரு விரோத சக்தி, உலகப் பொருளாதாரத்தின் மீது வலிந்த செல்வாக்கை செலுத்தக் கூடும்.

இது நடப்பதை அமெரிக்கா தடுக்க வேண்டும் மற்றும் பிராந்தியத்தை சுதந்திரமாகவும் திறந்ததாகவும் வைத்திருக்க வேண்டும்.

இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோ கூறியது போல, அமெரிக்கா, முதலில் அமெரிக்காவை மட்டும் குறிக்கவில்லை.

எமது இலக்குகளை அடைய, சுமையைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளர்களுடன் நாம் ஒத்துழைக்க வேண்டும்.

பெரும்பாலும், இது எமது கூட்டாளிகள் மூலோபாய திறனை உருவாக்க உதவ வேண்டும், இதனால் அவர்கள் உலகப் பொருளாதாரத்தில் சிறப்பாக ஒருங்கிணைக்கவும், அவர்களின் சுயாட்சியைப் பாதுகாக்கவும், சுதந்திரமான மற்றும் திறந்த பிராந்தியத்திற்கு பங்களிக்கவும் முடியும்.

இதைச் செய்ய எங்களிடம் பல கருவிகள் உள்ளன. தெற்காசிய நாடுகளுடனான எங்கள் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த விரும்புகிறோம்

ஏனெனில் வலுவான வர்த்தகம் எம் அனைவரையும் வலிமையாகவும் வளமாகவும் மாற்றும்,” என்றும் போல் கபூர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *