மேலும்

கோத்தாவை ஆதரிக்கமாட்டோம் – அசாத் சாலி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கமாட்டோம் என்று, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

“அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளரும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாது. இரண்டாம், மூன்றாம் சுற்று, வாக்குகளை எண்ண வேண்டியிருக்கும்.

கோத்தாபய ராஜபக்ச முன்வந்து, கீத் நொயாரை தாக்கவில்லை, லசந்த விக்ரமதுங்கவைக் கொல்லவில்லை, ரத்துபஸ்வெலவில் தண்ணீர் கேட்டவர்களை ராஜபக்சவினர் கொல்லவில்லை என்று உறுதியளிக்க முடியுமா?

கோத்தாபய ராஜபக்ச காலிமுகத்திடல் நிலங்களை ஷங்ரி லாவுக்கு விற்றபோது, அவரை எதிர்க்க யாரும் தைரியம் இருக்கவில்லை.” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *