கோத்தாவுக்கு மே 7இல் வழங்கப்பட்ட புதிய கடவுச்சீட்டு
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு கடந்த மே 7 ஆம் நாள் புதிய கடவுச்சீட்டு வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஆர்.எம். பி.எஸ். பி. ரத்நாயக்க தெரிவித்தார்.
எனினும், கடவுச்சீட்டு வழங்குவது என்பது, ஒருவர் தனது இரட்டை குடியுரிமையை கைவிட்டுள்ளார் அல்லது கைவிடவில்லை என்று அர்த்தமல்ல என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, கோத்தாபய ராஜபக்ச, தனது இரட்டை குடியுரிமை கைவிடப்பட்ட பின்னர், சிறிலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் புதிய கடவுச்சீட்டு வழங்கப்பட்டதாக கூறினார்.