மேலும்

மாதம்: June 2019

படையினரைக் கொன்றதாக குற்றச்சாட்டு – முன்னாள் புலிகளுக்கு எதிராக வழக்கு

போர்க்காலத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் மூவர் மீது வவுனியா மேல்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு இந்த மாதம் 24 ஆம் நாள் தொடக்கம் விசாரிக்கப்படவுள்ளது.

புடினுக்கு அழைப்பு விடுத்தார் சிறிலங்கா அதிபர் – அமெரிக்காவின் தடை குறித்தும் பேச்சு

ரஷ்யாவில் இருந்து சிறிலங்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் மீது, அமெரிக்கா விதித்துள்ள தடைகள் தொடர்பாக, சிறிலங்கா, ரஷ்ய அதிபர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

பதில் அமைச்சர்கள் நியமன மோதல் உச்சம் – பணியாற்ற வேண்டாமென ரணில் உத்தரவு

ஐதேகவைச் சேர்ந்த பதில் அமைச்சர்களான, லக்கி ஜயவர்த்தன, புத்திக பத்திரன, அனோமா கமகே ஆகியோரை, அந்தப் பதவிகளுக்கான கடமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

குழப்பத்தில் சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகள்

அரச பாதுகாப்பு  அதிகாரிகள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்கக் கூடாது என, சிறிலங்கா அதிபர் விடுத்துள்ள உத்தரவை அடுத்து, தெரிவுக்குழு விசாரணை நெருக்கடியில் சிக்கியுள்ளது.

‘சோபா’வின் சர்ச்சைக்குரிய பிரிவுகள் குறித்து பொம்பியோவுடன் பேச திட்டம்

அமெரிக்கா முன்மொழிந்துள்ள சோபா உடன்பாட்டின் சர்ச்சைக்குரிய பிரிவுகள் தொடர்பாக, கொழும்பு வரும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவுடன் பேச்சு நடத்தப்படும் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பொதுவாக்கெடுப்புக்கு தயாராகும் சிறிசேன – முதலில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த முயற்சி

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு மக்களின் அனுமதியைக் கோரும் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் அமைச்சர் பதவிகளை ஏற்கத் தயாராகும் முஸ்லிம் எம்.பிக்கள்

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்ட ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும், தமது பதவிகளை ஏற்றுக் கொள்வது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

மோடியின் பிறந்த நாளன்று நாமலுக்கு திருமணம்

சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு செப்ரெம்பர் 17ஆம் நாள் திருமணம் நடைபெறவுள்ளது.

ஜிகாதி தீவிரவாதம் பொது அச்சுறுத்தலாக உள்ளது – இந்திய தூதுவர்

ஜிகாதி தீவிரவாதம் அனைவருக்கும் பொதுவான அச்சுறுத்தலாக இருக்கிறது என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர், தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை

ஈஸ்டர் ஞாயிறன்று சிறிலங்காவில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில், ஐஎஸ் அமைப்பு  நேரடியாகத் தொடர்புபடவில்லை என்று சிறிலங்கா புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.