மேலும்

நாள்: 22nd April 2019

கொழும்பில் அமெரிக்க புலனாய்வுக் குழு – விசாரணைக்கு உதவ வந்தது

சிறிலங்காவில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக விசாரணைக்கு உதவ அமெரிக்கா, அவுஸ்ரேலியா, அனைத்துலக காவல்துறை புலனாய்வு நிபுணர்கள் கொழும்புக்கு விரைந்துள்ளனர்.

அவசரகாலச் சட்டம் பிரகடனம் – வெளிநாட்டு உதவியைக் கோருகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் இன்று நள்ளிரவு அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்ய சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடந்த தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாளை தேசிய துக்க நாளாக பிரகடனம்

சிறிலங்காவில் நாளை தேசிய துக்க நாள் கடைப்பிடிக்கப்படும் என்று  சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் மீண்டும் ஊரடங்குச் சட்டம்

சிறிலங்காவில் மீண்டும் இன்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சிறிலங்கா காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு ஆடம்பர விடுதிகள்

கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, கொழும்பில் உள்ள பல ஐந்து நட்சத்திர ஆடம்பர விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

குண்டுவெடிப்புகளில் பலியானோர் தொகை 290 ஆக உயர்ந்தது

சிறிலங்காவில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேரைக் காணவில்லை

சிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிர்நீத்த மக்களுக்காக இருண்டது ஈபெல் கோபுரம்

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபெல் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, சிறிலங்காவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கட்டுநாயக்க அருகிலும் குண்டு –  விமான நிலையத்தில் குவிந்த பயணிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகிலும் நேற்று இரவு குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

காலை 6 மணியுடன் ஊரடங்குச் சட்டம் நீக்கம்

சிறிலங்காவில் நேற்று மாலை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது.