கொழும்பில் அமெரிக்க புலனாய்வுக் குழு – விசாரணைக்கு உதவ வந்தது
சிறிலங்காவில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக விசாரணைக்கு உதவ அமெரிக்கா, அவுஸ்ரேலியா, அனைத்துலக காவல்துறை புலனாய்வு நிபுணர்கள் கொழும்புக்கு விரைந்துள்ளனர்.
அமெரிக்க புலனாய்வு அமைப்பான, எவ்பிஐ எனப்படும் சமஸ்டி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இன்று கொழும்பு வந்து விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
எவ்பிஐ அதிகாரிகள் இன்று வந்துள்ளனர். அவர்கள் எமக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள்.
அனைத்துலக காவல்துறை நிபுணர்கள் நாளை வரவுள்ளனர்.
அவுஸ்ரேலிய காவல்துறை அதிகாரிகள் குழுவும் விசாரணைக்கு உதவுவதற்காக கொழும்பு வரவுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.