மேலும்

நாள்: 21st April 2019

சிறிலங்கா குண்டுவெடிப்புகளில் 207 பேர் பலி – 450 பேர் காயம் (செய்திகளின் தொகுப்பு)

சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது என சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தெமட்டகொட குண்டுவெடிப்பில் 3 சிறிலங்கா காவல்துறையினர் பலி

தெமட்டகொட பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் மூவர் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா முழுவதும் உடனடியாக காலவரையற்ற ஊரடங்கு

சிறிலங்கா முழுவதும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அறிவித்துள்ளார்.

சிறிலங்கா குண்டுத் தாக்குதல்கள் – இந்தியா கடும் கண்டனம்

சிறிலங்காவில் இன்று இடம்பெற்றுள்ள மோசமான குண்டுத் தாக்குதல்களை இந்தியா வன்மையைாக கண்டித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தக் கோருகிறார் சம்பந்தன்

கொழும்பிலும், மட்டக்களப்பிலும் குண்டுத் தாக்குதல்களை நடத்திய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.

சமூக ஊடகங்களை முடக்க நடவடிக்கை

சிறிலங்காவில் சமூக ஊடகங்களின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்தே சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக் குண்டுதாரிகளே தாக்குதல் – விசாரணைகளில் தெரியவந்தது

சிறிலங்காவில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் – தெமட்டகொடவிலும் குண்டுவெடிப்பு

சிறிலங்கா முழுவதும் இன்று இரவு 6 மணி தொடக்கம்  ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்புகளில் 9 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 185 பேர் பலி – 469 பேர் காயம்

சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில், 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பிந்திக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெகிவளையில் மற்றொரு குண்டு வெடிப்பு – 2 பேர் பலி

கொழும்பு – தெகிவளையில் மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.