நாளை தேசிய துக்க நாளாக பிரகடனம்
சிறிலங்காவில் நாளை தேசிய துக்க நாள் கடைப்பிடிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே நாளை துக்கம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 23ஆம் நாளை, துக்கநாளாக பிரகடனம் செய்துள்ளார்.