மேலும்

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் – தெமட்டகொடவிலும் குண்டுவெடிப்பு

சிறிலங்கா முழுவதும் இன்று இரவு 6 மணி தொடக்கம்  ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்தே, நாடு முழுவதும் இரவு நேர ஊடரங்குச் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என காவல்துறை அறிவித்துள்ளது.

சற்று முன்னதாக கொழும்பு தெமட்டகொட பகுதியிலும் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.  மகாவில கார்டன்ஸ் பகுதியில் உள்ள வீட்டுத்தொகுதி அருகிலேயே இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

எனினும், எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

அதேவேளை, சிறிலங்காவின் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *