மேலும்

மாதம்: November 2018

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து நாளை விக்கியின் கட்சி ஆலோசனை

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நாளை கூடி ஆராயவுள்ளது.

சுதந்திரக் கட்சியை உடைத்துக் கொண்டு 50 முன்னாள் எம்.பிக்களுடன் வெளியேறினார் மகிந்த

சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி இன்று சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டார்.

குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்

கொழும்பு – பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலய வீதிக்குள் உள்நுழையும் போது வாசனை நிரம்பிய நறுமணத்தை உணர முடிவதுடன் மெல்லிசையையும் கேட்க முடியும். இந்திய மாக்கடலை அண்டிய காலி வீதியில் அமைந்துள்ள முருகன் ஆலயமான கதிரேசன் ஆலயமானது கொழும்பில் வாழும் தமிழ் மக்களால் வழிபடப்படும் ஒரு வணக்கத் தலமாகக் காணப்படுகிறது.

அரச ஊடகங்கள் தயாசிறி வசம் – ரம்புக்வெலவிடம் இருந்து பறிபோனது

மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் வசம் இருந்த அரச ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும், மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமான அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சோபித தேரரின் நினைவு நிகழ்வுக்கு வர மறுத்த சிறிலங்கா அதிபர்

2015ஆம் ஆண்டு, மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை அகற்றி, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியவர் மறைந்த வண. மாதுளுவாவே சோபித தேரர். அவரது இரண்டாவது ஆண்டு நினைவு நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றிருந்தது.

பைத்தியக் காரன், கொடுங்கோலன் என்று மைத்திரியை விமர்சித்த மங்கள

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை பைத்தியக் காரன் என்றும், கொடுங்கோலன் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர.

வீணையிலேயே ஈபிடிபி போட்டி – தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி

மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும், தமது கூட்டாளிக் கட்சிகளுடன் இணைந்து, பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், வடக்கில் அவர்களின் பங்காளிக் கட்சியான ஈபிடிபி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

தேர்தல் விடயத்தில் பசில் விடாப்பிடி – கண்டியிலேயே தங்கிவிட்ட மைத்திரி

நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி தனது மொட்டு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அதன் நிறுவுனரான பசில் ராஜபக்ச அடம்பிடித்து வருவதால், மைத்திரி- மகிந்த கூட்டணி இடையே முரண்பாடுகள் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடைசி சமரச முயற்சியையும் நிராகரித்தார் மைத்திரி – மனோ கணேசன்

அரசியல் நெருக்கடியைத் தீர்க்க நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட கடைசி முயற்சிகளையும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கலைப்புக்குப் பின்னால் இருந்த புலனாய்வு அறிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புலனாய்வுத் தகவல்கள் சிலவற்றின் அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்தார் என்று அரசாங்க உள்ளக தகவல்கள் கூறுகின்றன.