மேலும்

முகம் சுழித்த வெளிநாட்டு இராஜதந்திரிகள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற மோதல்கள் மற்றும் தாக்குதல்களை வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்ற அமர்வுகளை பார்வையிட வந்திருந்த வெளிநாட்டு இராஜாதந்திரிகள் பலரும் இன்றும் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தனர்.

சுமார் 10இற்கும் அதிகமான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அமர்ந்திருந்த மகிந்த ராஜபக்ச அணியினரின் அடாவடித்தனங்களைப் பார்வையிட்டனர்.

சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்திருந்ததையும், சபாநாயகர் மீது தாக்குதல் நடத்தியதையும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பார்வையிட்டு முகம் சுழித்ததையும் அவதானிக்க முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *