சாவகச்சேரி நகர முதல்வர் பதவியும் கூட்டமைப்பு வசமானது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களை வென்ற சாவகச்சேரி நகரசபையின் முதல்வர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களை வென்ற சாவகச்சேரி நகரசபையின் முதல்வர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
யாழ். மாநகர சபைக்கான முதல்வர் பதவிக்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, வி.மணிவண்ணனைப் போட்டியில் நிறுத்தியதால், நகரசபையில், முதல்வர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் போட்டியில் குதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட், தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிறுத்திய வி. மணிவண்ணன், வெளியேற்றப்பட்டுள்ளார்.
யாழ். மாநகர முதல்வர் பதவிக்கு இரண்டாவது தடவையாகவும் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு மும்முனைப் போட்டிய ஏற்பட்டுள்ளதை அடுத்து. இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2019 மார்ச் மாதத்துக்குப் பின்னர், சிறிலங்காவை, தனது மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்குள் அமெரிக்கா கொண்டு வரும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள், சிறிலங்காவை வேறுவிதமாகப் பார்த்தார்கள் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் யாழ்ப்பாண மாநகரசபையின் முதலாவது அமர்வு இன்று காலை நடைபெறவுள்ளது.
கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறைகளைத் தூண்டி விட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மகாசோன் படையணியின் தலைவர் மற்றும், செயற்பாட்டாளர்களை பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தேமம ஞானசார தேரர் சந்தித்துள்ளார்.