மேலும்

யாழ். மாநகர முதல்வர் பதவிக்கு இரண்டாவது முறையாக இரகசிய வாக்கெடுப்பு

jaffnaயாழ். மாநகர முதல்வர் பதவிக்கு இரண்டாவது தடவையாகவும் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாவதாக சற்று முன்னர் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆர்னோல்ட் 18 வாக்குகளைப் பெற்றார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் மற்றும் ஈபிடிபியின் ரெமீடியஸ் ஆகியோர் தலா 13 வாக்குகளைப் பெற்றனர்.

இருவர் சம வாக்குகளைப் பெற்றுள்ளதால்,  சட்ட ஒழுங்குகளின் படி,  ஒருவரை நீக்கிவிட்டு,  அதிக வாக்குகளைப் பெற்றவருடன், போட்டியிடும் வகையில் இரண்டாவது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *