மேலும்

நாள்: 22nd March 2018

யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியோரின் குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு

யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்திக்க மறுத்து விட்டார் என்று வெளியான செய்திகளை சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு ஆதாரங்களுடன் மறுத்துள்ளது.

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – ஏப்ரல் 4இல் விவாதம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்சவுக்கு அமெரிக்கா வரத் தடை

சிறிய தாயாரின் மரணச்சடங்கில் பங்கேற்க, மொஸ்கோவில் இருந்து, ஹொஸ்டனுக்குச் செல்ல முற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, தமது நாட்டுக்குள் நுழைவதற்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

ஆலயக் குருக்களைக் கொன்ற சிறிலங்கா இராணுவ சிப்பாய், புலனாய்வாளர்கள் 3 பேருக்கு மரணதண்டனை

சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று,  அவரது பிள்ளைகளைக் காயப்படுத்தி, நகைகள் மற்றும் உந்துருளியைக் கொள்ளையிட்ட சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் மற்றும் இரண்டு இராணுவப் புலனாய்வாளர்களுக்கு யாழ். மேல்நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அரசியல் கைதி ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளிக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் விக்கி கோரிக்கை

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி, ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இன்று பாகிஸ்தான் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் பயணமாக இன்று பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

ஜெனிவாவில் இணை அனுசரணை நாடுகள் ஏமாற்றம்

ஜெனிவாவில் சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், மெதுவான முன்னேற்றங்களே இருப்பது குறித்து, இணை அனுசரணை நாடுகள், நேற்று ஏமாற்றம் வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா பொறுப்புக்கூறல் வாக்குறுதியை நிறைவேற்றுவது சந்தேகமே – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை உருவாக்கும் விடயத்தில் மெதுவான முன்னேற்றங்களே இடம்பெறுவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்.

சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்து ஒத்திகை பார்த்த மகிந்த

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று அமர்ந்து கொண்டார். அதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.