மேலும்

மகாசோன் படையணித் தலைவரைச் சந்தித்தார் ஞானசார தேரர்

Gnanasaraகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறைகளைத் தூண்டி விட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மகாசோன் படையணியின் தலைவர் மற்றும், செயற்பாட்டாளர்களை பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தேமம ஞானசார தேரர் சந்தித்துள்ளார்.

இன வன்முறைகளைத் தூண்டிய மகாசோன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்டவர்கள் அனுராதபுர சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானில் இருந்து திரும்பியவுடன், ஞானசார தேரர் அனுராதபுர சிறைக்குச் சென்று இவர்களைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

ஞானசார தேரரும், கண்டிக்குச் சென்ற பின்னரே, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *