மேலும்

நாள்: 14th March 2018

நாடு கடத்தப்படவிருந்த நிலையில் விமானத்தில் இருந்து கடைசி நிமிடத்தில் இறக்கப்பட்ட தமிழ்க் குடும்பம்

அவுஸ்ரேலியாவில் இருந்து சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று கடைசிநேரத்தில் கீழே இறக்கப்பட்டதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடும் பாதுகாப்புடன் இரு சிறப்பு விமானங்களில் கட்டுநாயக்கவில் வந்திறங்கிய 26 இலங்கையர்கள்

இரண்டு நாடுகளில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடுகடத்தப்பட்ட 26 இலங்கையர்களுடன், இரண்டு சிறப்பு விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

வட்ஸ்அப் மீதான தடை இன்று நள்ளிரவு நீக்கப்படும்

சிறிலங்காவில் வட்ஸ்அப் சமூக வலைத் தளச் செயலி மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை இன்று நள்ளிரவுடன் நீக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

மகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டியில் நேற்று அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் மூடிய அறைக்குள் இரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர நேற்றுடன் ஓய்வு

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர, நேற்றுடன் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார். இதையடுத்து சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலை தளபதிப் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

மகிந்தவின் எழுச்சிக்குப் பின் வீழ்ச்சி காணும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு

சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றதையடுத்து, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 1.18 ரூபாவினால் (0.76 வீதம்) வீழ்ச்சி கண்டுள்ளது.

சீனா உடன்பாட்டை மீறுவதற்கு சிறிலங்கா அனுமதிக்காது – மைத்திரி

சீனாவின் ஒரு பாதை ஒரு அணை பொருளாதார முயற்சி, அனைத்துலக சமூகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வன்முறைகளில் 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் சேதம்

சிறிலங்காவில் கடந்தவாரம் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில், 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

மகாசோன் பலகாயவின் பணியகத்தில் தேடுதல் – பெற்றோல் குண்டுகள், இனவாத பிரசுரங்கள் மீட்பு

கண்டியில் இன வன்முறைகளைத் தூண்டி விட்டதாக குற்றம்சாட்டப்படும், மகாசோன் பலகாயவின் பணியகத்தில் நேற்று நடத்தப்பட்ட தேடுதலின் போது, பெற்றோல் குண்டுகள், வன்முறைகளைத் தூண்டும் பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் வைபர் தடை நீங்கியது – முகநூலுக்குப் புதிய கட்டுப்பாடுகள்

வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்கள் வெளியிடுவதை தடுக்கும் வகையில், முகநூல் பயன்பாட்டுக்கு சிறிலங்காவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.