மேலும்

கூட்டு அரசு தொடரும், அமைச்சரவையில் மாற்றம் – ராஜித சேனாரத்ன

rajitha senaratneஐதேகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கம் தொடரும் என்று, அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“கூட்டு அரசாங்கம் தொடர்ந்து செயற்படும். இன்னும் சில நாட்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும்.” என்றும் அவர் கூறினார்.

இன்றைய செய்தியாளர் சந்திப்பில், ஐதேகவைச் சேர்ந்த, அமைச்சரவை இணைப் பேச்சாளர்களான ராஜித சேனாரத்னவும், கயந்த கருணாதிலகவும் மாத்திரம், பங்கேற்றிருந்தனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைப் பேச்சாளரான தயாசிறி ஜெயசேகர இன்றைய செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *