மேலும்

கிளிநொச்சியின் மூன்று பிரதேச சபைகளிலும் கூட்டமைப்பு அமோக வெற்றி

local-election results (2)கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரைச்சி பிரதேச சபையின் 21 வட்டாரங்களில் 16 வட்டாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஏனைய 5 வட்டாரங்களை சந்திரகுமார் தலைமையிலான சுயேட்சைக் குழு கைப்பற்றியுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் உள்ள மொத்தம் 8 வட்டாரங்களில் 6 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. 2 வட்டாரங்களில் சுயேட்சைக் குழு வெற்றி பெற்றுள்ளது.

பூநகரி பிரதேச சபையில் உள்ள 11 வட்டாரங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம், கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் கூட்டமைப்பு தனித்து ஆட்சி செய்யும் நிலையில் உள்ளது.

விகிதாசார ரீதியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரம் இன்னமும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *