மேலும்

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியில் இருந்து இடைநிறுத்தம் – விசாரணைகள் ஆரம்பம்

Brigadier Priyanka Fernandoலண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த, சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ உடனடியாக, பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பதவியை வகித்து வந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சைகை செய்த காணொளி பரவியதை அடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

உடனடியாக அவரை மினிஸ்டர் கொன்சீலர் (பாதுகாப்பு) பணியில் இருந்து இடைநிறுத்துமாறு லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Brigadier Priyanka Fernando

அத்துடன் சிறிலங்கா இராணுவத்தை உள்ளடக்கிய, சிறிலங்காவில் உள்ள அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக ஆரம்பகட்ட விசாரணைகளை தொடங்கவுள்ளனர்” என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *