வடக்கில் பரப்புரைக்கு புலிகளின் பாடல்கள் – தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கபே முறைப்பாடு
வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளுக்கு, விடுதலைப் புலிகளின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியப் பாடல்கள் பயன்படுத்தப்படுவது குறித்து, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம், தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே முறைப்பாடு செய்துள்ளது.