மேலும்

அமெரிக்கத் தூதுவர் – வடக்கு முதல்வர் சந்திப்பு

cm-atulவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

“முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தைப்பொங்கல் வாழ்த்துகளைப் பரிமாறினேன்.

வட மாகாண விவகாரங்கள் தொடர்பாக நல்லதொரு கலந்துரையாடலை நடத்தினேன்.

குறிப்பாக, நிலையான தேசிய நல்லிணக்கம் மற்றும் அனைத்து குடிமக்களுக்குமான பிரகாசமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜெனிவா வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டியதன் தேவை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

cm-atul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *