93 உள்ளூராட்சி சபைகளுக்கு டிசெம்பர் 11 முதல் 14 வரை முதல் வேட்புமனுத்தாக்கல்
சிறிலங்காவில் 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடம் வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
இது தொடர்பான அறிவித்தல்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள், டிசெம்பர் 11ஆம் நாள் தொடக்கம் 14ஆம் நாள் வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் இன்று தொடக்கம், எதிர்வரும் டிசெம்பர் 13ஆம் நாள் வரை கட்டுப்பணத்தை செலுத்த முடியும்.