புதுடெல்லி சென்றார் ரணில் – இன்று மோடியைச் சந்திக்கிறார்
இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
பெங்களூருவில் இருந்து நேற்று புதுடெல்லியைச் சென்றடைந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் வரவேற்றனர்.
இன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ள 5 ஆவது உலக இணையவெளி கருத்தரங்கு -2017இன் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கவுள்ள சிறிலங்கா பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுக்களையும் நடத்தவுள்ளார்.
வர்த்தகம், மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும வலுப்படுத்துவது தொடர்பாக இந்தப் பேச்சுக்களில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
அதேவேளை, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தையும், சிறிலங்கா பிரதமர் இன்று சந்திக்கவுள்ளார்.