மேலும்

வரவுசெலவுத் திட்டம் நிறைவேறியது – அரசுக்கு மீண்டும் கைகொடுத்தது கூட்டமைப்பு

sri lanka parliamentசிறிலங்கா அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. 

வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் 5 மணியளவில் நடத்தப்பட்டது.

இதன்போது, 151 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 58 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். இதனால், 93 மேலதிக வாக்குகளால் வரவுசெலவுத் திட்டம் நிறைவேறியது.

இந்த வாக்கெடுப்பில், ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களிததனர்.

ஜேவிபி மற்றும் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

மூன்றாவது வாசிப்பு மீது நாளை முதல் குழுநிலை விவாதங்கள் இடம்பெற்று இறுதி வாக்கெடப்பு டிசெம்பர் 9ஆம் நாள் நடைபெறும்.

ஒரு கருத்து “வரவுசெலவுத் திட்டம் நிறைவேறியது – அரசுக்கு மீண்டும் கைகொடுத்தது கூட்டமைப்பு”

  1. mano says:

    நன்றி நிறைந்த ஜீவன்கள் நாம். நம்பியவரைக் கைவிட மாட்டோம். சமயத்தில் கோவணத்தைக் கூடக் குளிருக்குப் போர்த்திக் கொள்ள தானமாகத் தரும் பேகன்களாகவும் நாம் இருப்போம். மானமுள்ள தமிழ்ச் சாதி என்பதே எமது இனப் பெருமை. அதை இப்போதும் சாதித்துக் காட்டிப் பெருமை தேடிவிட்டோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *