மேலும்

மாதம்: October 2017

சிறிலங்காவிலேயே வறுமை நிலையில் வடக்கு மாகாணம் முதலிடம்

சிறிலங்காவில் வறுமை நிலை குறைந்துள்ள போதிலும், வடக்கு மாகாணத்தில்  வறுமை நிலை அதிகளவில் உள்ளதாக சிறிலங்காவின் சனத்தொகை புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அதிகாரபூர்வ தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மகிந்த தலைமையில் பரப்புரைப் பேரணிகள் – அடுத்த மாதம் தொடங்குகிறது

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை இலக்கு வைத்து, சிறிலங்கா பொதுஜன முன்னணி தொடர் பேரணிகளை நடத்த முடிவு செய்துள்ளது.

இன்று கூட்டமைப்பைச் சந்திக்கிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர், பப்லோ டி கிரெய்ப் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

விளக்கமறியலில் இருந்து கொண்டு நீதிமன்றுக்கு ஆட்டம் காட்டும் கொமடோர் தசநாயக்க

2008/09 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை சம்பந்தமான வழக்கில் கைது செய்யப்பட்ட, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர், கொமடோர் டிகேபி தசநாயக்கவை நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாதது ஏன் என்று சிறைச்சாலை அதிகாரிகளிடம் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிப்பு

அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் வரை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

யதார்த்தத்தை புரிந்து செயற்படுங்கள் – வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு புதுடெல்லியில் அறிவுரை

வடக்கு மாகாணசபை யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்வர வேண்டும் என்று புதுடெல்லியில் நடத்தப்பட்ட, வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான வலுவூட்டல் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் குடும்பத்தினரை வெறும் கையுடன் திருப்பி அனுப்பினார் சிறிலங்கா அதிபர்

சட்டமா அதிபரும், நீதி அமைச்சரும் வெளிநாடு சென்றிருப்பதால், அடுத்தவாரம் நாடு திரும்பிய பின்னர், அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து அவர்களுடன் கலந்துரையாடுவதாகக் கூறி, அரசியல் கைதிகளின் குடும்பத்தினரையும், தமிழ் அரசியல்பிரமுகர்களையும் சிறிலங்கா அதிபர் வெறும் கையுடன் திருப்பி அனுப்பியுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் இந்தோனேசியப் போர்க்கப்பல்

இந்தோனேசியக் கடற்படையின் இலகு ரக பலநோக்குப் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளது.

கூட்டறிக்கைக்குப் பின்னால் மகாநாயக்கர்களே உள்ளனர் – அஸ்கிரிய பீடத்தின் செயலாளர்

அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களும், இரு பீடங்களின் காரக சங்க சபாவின் கூட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்குப் பின்னால் இருப்பதாக அஸ்கிரிய பீடத்தின், செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மக்களை தவறாக வழிநடத்த முயற்சி – ஊடகங்கள் மீது சிறிலங்கா பிரதமர் பாய்ச்சல்

புதிய அரசியலமைப்புக்கு அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருப்பதாக, ஊடகங்கள் மக்களை தவறாக வழி நடத்த முயற்சிப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.