மேலும்

மகிந்த தலைமையில் பரப்புரைப் பேரணிகள் – அடுத்த மாதம் தொடங்குகிறது

basil-slppஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை இலக்கு வைத்து, சிறிலங்கா பொதுஜன முன்னணி தொடர் பேரணிகளை நடத்த முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் நொவம்பர் 12ஆம் நாள் அனுராதபுரவில் முதலாவது பரப்புரைப் பேரணி தொடங்கப்படவுள்ளது.

இந்தப் பேரணிகளுக்கு, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தலைமை தாங்குவார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், சிறிலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடவுள்ள கூட்டு எதிரணியில் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பேரணிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *