மேலும்

இன்று கூட்டமைப்பைச் சந்திக்கிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

tnaசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர், பப்லோ டி கிரெய்ப் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்தும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சிறிலங்காவில் இரண்டு வாரகாலப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இவர் இன்று காலை 11 மணியளவில், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா விடுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *