மேலும்

முழுமையான நல்லிணக்கம் இன்னமும் ஏற்படவில்லை – ஒஸ்ரின் பெர்னான்டோ

Austin-fernandoசிறிலங்காவில் இன்னமும் முழுமையான நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை என்று கிழக்கு மாகாண ஆளுனர் பதவியில் இருந்து விலகி- சிறிலங்கா அதிபரின் செயலராகப் பதவியேற்கவுள்ளவரான ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் நடந்த பிரியாவிடை நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான ஒவ்வொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் செயலராகப் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியான பின்னர் சமூக ஊடகங்களில் என்மீத தாக்குதல் தொடுக்கப்படுகிறது.

புதிய பதவியை ஏற்றுக் கொள்ளவுள்ளதால், ஊடகங்களில் தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளை எதிர் கொள்வதற்கு தயாராக இருக்குமாறு எனது குடும்பத்தினரைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *