மேலும்

மாதம்: June 2017

கூட்டுப்படைத் தளபதியாகிறார் லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டு, கூட்டுப்படைகளின் தளபதியாக நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாவையைச் சந்தித்தார் முதலமைச்சர் – கூட்டாகச் செயற்படுவதற்கு இணக்கம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவுக்கும் இடையில் நேற்று முக்கிய பேச்சு நடத்தப்பட்டது.

காணாமல் போனோர் பணியகத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறது பிரித்தானியா

காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டம், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதை பிரித்தானியா வரவேற்றுள்ளது.

இந்தியக் கடற்படையின் டோனியர் விமானங்கள் பயிற்சியை முடித்து திரும்பின

சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படையினருக்குப் பயிற்சிகளை அளிப்பதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்த இந்தியக் கடற்படையின் டோனியர் விமானங்கள், பயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளன.

காணாமல்போனோருக்கான பணியகத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்- அனைத்துலக மன்னிப்புச்சபை

மிகவும் தாமதிக்கப்பட்டு விட்ட காணாமல் போருக்கான பணியகத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் அனைத்துலக மன்னிப்புச்சபை கோரியுள்ளது.

ஜனநாயகத்துக்கு சவால் விடும் போது மௌனமாக இருக்க முடியாது – ரவி கருணாநாயக்க

நாட்டு மக்களைப் பணயம் வைக்கும் வகையில், சிறியதொரு அடிப்படைவாதக் குழு, ஜனநாயகத்துக்குச் சவால் விடும் போது, மக்களின் அரசாங்கம் ஒன்றினால் மௌனமாக இருக்க முடியாது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் புதிதாக தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

கபொத உயர்தரப் பரீட்சையில், சித்தியடைந்த மாணவர்களுக்கு, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் பட்டங்களை வழங்கும் வகையில் சிறிலங்காவில் புதிதாக தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.

காணாமல்போனோருக்கான பணியகத்துக்கு விசாரணை நடத்தும், வழக்குத் தொடுக்கும் அதிகாரம் இல்லை

காணாமல்போனோருக்கான பணியகத்துக்கு குற்றவியல் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரமோ, சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரமோ இருக்காது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிறிலங்கா துறைமுகங்களை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரான்ஸ்

சிறிலங்காவின் துறைமுகங்களில், குறிப்பாக கொழும்பு துறைமுகம் தொடர்பாக இடம்பெற்று வரும் மாற்றங்களை பிரான்ஸ் உன்னிப்பாக பின்தொடர்ந்து வருகிறது. ஏனென்றால், பிரெஞ்சு நிறுவனங்கள், இங்கு கால்வைப்பதற்கு ஆர்வம் கொண்டுள்ளன என்று சிறிலங்காவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் சூ தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் வரட்சியால் 9 இலட்சம் பேரின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – ஐ.நா அறிக்கை

சிறிலங்காவில் வரட்சி மற்றும் வெள்ளத்தினால் உணவு உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 9 இலட்சம் மக்களின் உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக, ஐ.நா அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.