மேலும்

நாள்: 29th June 2017

முதலமைச்சருடன் அரசியல் பேசுவதை தவிர்த்த இந்தியத் தூதுவர்

யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போது, அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டுள்ளார்.

இந்தியத் தூதுவருடன் முதல்வர் விக்கி சந்திப்பு – புதிய அமைச்சர்களுக்கு மாத்திரம் அனுமதி

இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து இன்று வடக்கிற்கான முதலாவது பயணத்தை மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தி வருகிறார்.

வடமாகாண அமைச்சர்களாக அனந்தி, சர்வேஸ்வரன் பதவியேற்பு

வடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு இன்று காலை வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில், ஆளுனர் ரெஜினோல்ட் குரே, முன்னிலையில் இடம்பெற்றது.

32 இலங்கையர்களை சிறப்பு விமானத்தில் நாடு கடத்தியது பல்கேரியா

பல்கேரியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 32 இலங்கையர்கள் சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா மத்திய வங்கியின் யாழ். பணியக செயற்பாடுகள் கிளிநொச்சிக்கு மாற்றம்

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்திய உதவிப் பணியகத்தின் செயற்பாடுகள், கிளிநொச்சி அறிவியல் நகரில் செயற்படும், சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்திய பணியகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஒற்றையாட்சித் தன்மையை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்கும் – மகாநாயக்கர்களிடம் உறுதி

நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்கும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, உறுதியளித்துள்ளார்.

பிரிக்கப்படாத நாட்டுக்குள் உச்ச அதிகாரப்பகிர்வு – சிறிலங்கா பிரதமர்

அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம், பிரிக்கப்படாத நாட்டுக்குள் கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு அனைத்துக் கட்சிகளும் இணங்கியிருப்பதாகவும்,  புதிய அரசியலமைப்பை உருவாக்குவதா அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதா என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.