இந்தியா அனுப்பிய இரண்டாவது கப்பலும் கொழும்பு வந்தது
சிறிலங்காவில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்கள் மற்றும் மீட்புக் குழுக்களுடன் இந்தியக் கடற்படையின் இரண்டாவது கப்பல் இன்று மதியம் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
ஐஎன்எஸ் சர்துல் என்ற இந்தக் கப்பலில் மருந்துகள், குடிநீர், உலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அவசர உதவிப் பொருட்கள், ஏற்றி வரப்பட்டுள்ளன.
கொழும்புத் துறைமுகத்தில் இந்தப் பொருட்களை இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, சிறிலங்கா நிதியமைச்சரிடம் கையளித்தார்.
இந்தியக் கடற்படைக் கப்பலில் இருந்து உதவிப் பொருட்கள் துரிதமாக இறக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.