மேலும்

திடீர் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார் சிறிலங்கா அதிபர்

cabinetஅமைச்சரவைக் கூட்டங்களை சிறிலங்கா அதிபர் இடைநிறுத்தி வைத்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், நேற்று திடீரென அமைச்சரவைக் கூட்டத்தை சிறிலங்கா அதிபர் கூட்டியிருந்தார்.

குறுகிய நேர காலஅவகாசத்துடன் விடுக்கப்பட்ட அழைப்புடன் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது.

வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

எனினும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனா சென்றுள்ளதாலும், அமைச்சரவை மாற்றம் நிகழவுள்ளதாலும் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதை சிறிலங்கா அதிபர் நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் சிறிலங்கா அதிபர் அமைச்சர்களுக்கு திடீர் அழைப்பு விடுத்து நேற்றுக்காலை அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார்.

அதிபர் செயலகத்தில் காலை 10 மணி தொடக்கம் சுமார் ஒன்றரை மணிநேரம் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இதற்கிடையே சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதன்போது வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து மங்கள சமரவீர நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அமைச்சரவைக் கூட்டம் நிறுத்தப்பட்டது தொடர்பான தகவல்கள் வெளியானதால், அரசாங்கம் பலவீனப்படலாம் என்பதாலேயே சிறிலங்கா அதிபர் நேற்று திடீர் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *