மேலும்

சிறிலங்காவுடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படாது – சஞ்சய் பாண்டா

india-sri-lankaஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தின் போது எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சின், இந்தியப் பெருங்கடல் விவகாரங்களுக்கான இணைச் செயலர் சஞ்சய் பாண்டா தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமருடன் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஏஎன்ஐ செய்தியாளரிடம் நேற்றிரவு பேசும் போதே இவ்வாறு கூறினார்.

இந்தியப் பிரதமரின் இந்தப் பயணத்தின். போது, எந்த உடன்பாடுகளோ, புரிந்துணர்வு உடன்பாடோ கையெழுத்திடப்படாது. ஆனால், சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்தியப் பிரதமர் பேச்சுக்களை நடத்துவார்.

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் விண்வெளி சார்ந்த துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு எதிர்பார்க்கிறோம்” என்றும் சஞ்சய் பாண்டா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *