மேலும்

சிறிலங்கா வழியாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அனுப்பப்பட்ட மாத்திரைகள் இத்தாலியில் சிக்கின

Tramadolஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் இருந்து சிறிலங்கா வழியாக கப்பலில் அனுப்பப்பட்ட 37 மில்லியன் வலி நிவாரணி மாத்திரைகள் இத்தாலி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Tramadol என்ற வலி நிவாரணியாகப் பயன்படுத்தும் 37 மில்லியன் மாத்திரைகள் இந்திய மருந்து நிறுவனம் ஒன்றினால், லிபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் இருந்தே இந்த மருந்துக் கொள்கலன்கள், கப்பல் மூலம் லிபியாவுக்கு அனுப்பப்பட்டது. லிபியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் தேவைக்காகவே இவை அனுப்பி வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

இத்தாலியின் ஜினோவா துறைமுகத்தில்  கப்பல் ஒன்றில் இருந்த மூன்று கொள்கலன்களில் இருந்து இந்த மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

எனினும் இந்தக் கொள்கலன்களில் கம்பளிகள் மற்றும் சம்பூ போன்றவை இருப்பதாகவே பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *