மேலும்

மாதம்: March 2017

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறிலங்கா மாலுமிகளுடன் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு

சோமாலிய கடற்கொள்ளையர்களால் 8 சிறிலங்கா மாலுமிகளுடன் கடத்தப்பட்ட அரிஸ் -13 என்ற  எண்ணெய் தாங்கி கப்பல் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளதாக மொகடிசுவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிலங்கா குறித்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குமாறு நாடுகளை அழைக்கிறது அமெரிக்கா

சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் ஏற்படுத்துவதற்காக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குமாறு, நாடுகளுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது – மறுக்கிறது சிறிலங்கா

போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறுவோம் – அமெரிக்கா எச்சரிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கணிசமான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால், அமெரிக்கா அதில் தொடர்ந்து இணைந்திருக்காது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் றெக்ஸ் ரில்லர்சன் எச்சரித்துள்ளார்.

மிலேனியம் சவால் திட்டப் பணியகத்தை சிறிலங்காவில் அமைக்கிறது அமெரிக்கா

அமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு திட்டப் பணியகத்தை சிறிலங்காவில் அமைப்பதற்கு, அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

ஐ.நா பணியகத்துக்கு சிறிலங்காவில் இடமில்லை – அனைத்துலக சமூகம் தமது பக்கம் நிற்கிறதாம்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் செயலகம் ஒன்றை சிறிலங்காவில் அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்கவில்லை என்று பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியா நாடு கடத்திய 25 இலங்கை அகதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

அவுஸ்ரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 25 இலங்கை அகதிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பல் – குழப்பமான தகவல்களை வெளியிடும் சிறிலங்கா கடற்படை

சோமாலிய கடற்கொள்ளையர்களால், கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பலின் மாலுமிகள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படை குழப்பமான- முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருகிறது.

மே மாதத்துக்கு முன் சிறிலங்கா முன்னேற்றத்தை காட்ட வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க முன்னதாக, மனித உரிமைகள்  தொடர்பாக உறுதியான முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

புலிகளுக்கான நிதி சேகரிப்பு தீவிரவாத செயற்பாடே – ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்

விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த நால்வர், தமது நடவடிக்கையை தீவிரவாதச் செயற்பாடு என்று வகைப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.