மேலும்

அவுஸ்ரேலியா நாடு கடத்திய 25 இலங்கை அகதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

deportedஅவுஸ்ரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 25 இலங்கை அகதிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக நுழைந்து அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோரிய 25 இலங்கை அகதிகள் இன்று சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இவர்கள் மலேசியாவில் இருந்து அவுஸ்ரேலியாவுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 25 இலங்கை அகதிகளும், குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 25 அகதிகளில், நான்கு பெண்களும் அடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *