கொழும்பு வந்தது சீனக் கடற்படையின் ஆய்வுக் கப்பல்
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின், சமுத்திரவியல் ஆய்வுக் கப்பலான, குவான் சான்கியாங் நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.
நேற்றுக்காலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த சீன கடற்படையின் ஆய்வுக் கப்பலுக்கு, சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
விநியோக உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும், தொழில்நுட்ப தரிப்புக்காகவுமே, இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகம் வந்துள்ளது.
வரும் 6ஆம் நாள், சீன ஆய்வுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை விட்டு புறப்பட்டுச் செல்லவுள்ளது.