மேலும்

இலங்கையர்களுக்குத் தடையில்லை – அமெரிக்கா

us-embassy-colomboஅமெரிக்காவுக்குள் நுழைய இலங்கையர்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கையர்கள் உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 71 பேர் நியூயோர்க் ஜோன் எவ் கெனடி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக அனைத்துலக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்த நிலையிலேயே அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறைவேற்று உத்தரவின் மூலம் அண்மையில் அமெரிக்காவினுள் நுழைவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள 7 நாடுகளில் சிறிலங்கா உள்ளடங்கவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, அமெரிக்க விமான நிலையங்களில் இலங்கையர்கள் தடுக்கப்பட்டதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அமெரிக்காவில் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளன.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே, அமெரிக்காவில் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் இதுகுறித்து உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அவர்கள் தொடர்பில் இருக்கின்றனர்.

எந்தவொரு இலங்கையராவது, அமெரிக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, உதவிகள் தேவைப்பட்டால், நியூயோர்க்கில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின், 001 917 597 7009 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *